சென்ட்ரல் கண்ணப்பன் திடலில் உள்ள நேரு மார்க்கெட்டில் 150 கடைகள் நீண்ட நாள் சொத்து வரி செலுத்தாமல் 50 லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்திருந்த காரணத்தால் வருவாய் துறை அதிகாரிகள் இன்று அதிகாலை போலீசார் துணையுடன் பூட்டி சீல் வைத்தனர். ராயபுரம் மண்டலத்தில் ரூ.70 லட்சம் சொத்து வரி பாக்கி வைத்துள்ள 150 கடைகள், 3 கட்டிடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைக்கப்பட்ட வீடு மற்றும் கடை உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தினால் உடனடியாக சீல் அகற்றப்படும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 5வது மண்டலத்தில் சொத்து வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post ராயபுரம் மண்டலத்தில் ரூ.70 லட்சம் சொத்து வரி பாக்கி 150 கடைகள், 3 கட்டிடங்களுக்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.
