6 போலீசார் சஸ்பெண்ட்

திகம்கர்: மத்தியப்பிரதேசத்தில் சூதாடிய வீடியோ வைரலான நிலையில் அதில் இருந்த 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் திகம்கர் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் பணிபுரியும் 6 காவலர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ நேற்று முன்தினம் மாலை சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ மாவட்ட எஸ்பி ரோகித் கஷ்வானி கவனத்துக்கு வந்த நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது குறித்து எஸ்பி ரோகித் கூறுகையில்,‘‘இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தும் , வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்பது குறித்து விசாரணை நடக்கிறது” என்றார்.

The post 6 போலீசார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: