மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜ 2ம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீளவில்லை. அதனால் பாஜ மீதும், தலைவர் அண்ணாமலை மீதும் அவதூறுகளை பரப்பி வருகிறார். எடப்பாடி பழனிசாமி, உதயகுமார், ஜெயக்குமார், சி.வி சண்முகம், கே.பி.முனிசாமி போன்ற வாய் சவடால் வீரர்கள் அதிமுகவை அழிவுப்பாதையில் கொண்டு செல்வதை தடுத்து, மீட்க வேண்டும் என்பதுதான் பெரும்பான்மையான அதிமுக தொண்டர்களின் கருத்து. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் படுதோல்வி அடைய நேரிடும் என்ற பயத்தால் அதிமுக போட்டியிடவில்லை. அதிமுக தலைவர்கள் தொடர்ந்து இதேபோன்று பாஜ குறித்தும், தலைவர் அண்ணாமலை குறித்தும் அவதூறு பேசி வந்தால், 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை appeared first on Dinakaran.