ஐதராபாத்: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளதால் பாஜ அதிர்ச்சி அடைந்துள்ளது.ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜ கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
தொடர் அமளியில் கடந்த நாடாளு மன்ற கூட்ட த் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை.