கூத்தியார்குண்டு கிராமத்தில் மயானம் அருகே மர்ம பிணம்?

திருப்பரங்குன்றம், பிப்.25: திருப்பரங்குன்றம் அருகே மயானம் அருகே மர்மமான முறையில் புதைக்கப்பட்ட இடத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது கூத்தியார்குண்டு கிராமம். இந்த கிராமத்தின் கண்மாய் கரையை ஒட்டிய பகுதியில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டின் அருகே உள்ள கண்மாய் கரையோரம் மர்மமான முறையில் சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியாமல் ஏதோ புதைக்கப்பட்ட தடம் இருப்பதாக சுடுகாட்டில் பணி புரியும் ஊழியர்கள் கிராம தலைவர் மற்றும் பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் மர்ம நபர்கள் யாரேனும் குழந்தை அல்லது வேறு யாரையாவது இங்கு புதைத்துள்ளனரா அல்லது பில்லி சூனியம், ஏவல், வசியம் செய்வதற்காக ஏதாவது புதைக்கப்பட்டுள்ளதா என்கிற பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: