அரை நூற்றாண்டு கடந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மதுரை, பிப்.25: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் (1961-64) அரை நூற்றாண்டு கடந்து சந்தித்து அகமகிழ்ந்தனர்.கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். முன்னாள் பேராசிரியர்கள் குணராஜ், டேவிட் ஜெயராஜ், ஸ்டீபன் சாமுவேல் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவரான பிஆர்சி முன்னாள் சட்டத்துறை மேலாளர் மாரியப்பன் வரவேற்றார்.

மாணவர் சங்க தலைவர் உதவி பேராசிரியர் ராஜேஷ், பதிவாளர் பிரகாசம் மற்றும் ஏராளமான முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தங்கள் கல்லூரி பருவ நாட்களின் நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டதுடன், தாங்கள் கல்வி கற்ற வகுப்பறைகளையும் சுற்றிப்பார்த்தனர். முன்னாள் மாணவர்கள் கூறும்போது, ‘‘அரை நூற்றாண்டு கடந்து இந்த சந்திப்பு நடந்துள்ளது. பலரும் மிகப்பெரிய அதிகாரிகளாக, தொழில் வல்லுநர்களாக உள்ளனர். குடும்பத்துடன் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்தது, வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது’’ என்றனர்.

Related Stories: