நாகமலைபுதுக்கோட்டையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

திருப்பரங்குன்றம், பிப்.25: நாகமலை புதுக்கோட்டையில் பள்ளி மற்றும் கோயில் அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.நாகமலை புதுக்கோட்டையில் மதுரை-தேனி சாலைக்கு மிக அருகில் புதியதாக டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட உள்ளது. இந்த மதுக்கடை திறக்க இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது திறக்கப்பட உள்ள இந்த டாஸ்மாக் கடைக்கு மிக அருகில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. மேலும் இந்த கடை அமையவுள்ள பகுதியில் கோயில் உள்ளதால் இங்கு மதுக்கடை திறக்க இப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து இப்பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் கூறுகையில், ‘தற்போது இங்கு 5401 என்ற எண் கொண்ட கடை அமையவுள்ளது. இந்த கடையானது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2017ல் மூடப்பட்ட கடை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்கிறது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது எனவும், இது குறித்து கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். என்வே பொதுமக்களை பாதிக்கும் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: