சிஎஸ்ஐ ஆலயத்தில் காணிக்கை பெட்டியை உடைத்து திருட்டு

திருவட்டார்: திருவட்டார்   பூவன்கோடு பகுதியில் சிஎஸ்ஐ ஆலயம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று   நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் ஆலயத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து  அங்குள்ள காணிக்கை பெட்டியை  உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மறுநாள் காலை நிர்வாகிகள் வந்து ஆலயத்தை திறந்த போது காணிக்கை பெட்டி   உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

 பின்னர் இது  குறித்து திருவட்டார் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலயத்தில் ஜன்னலை உடைத்து புகுந்து காணிக்கை பணத்தை திருடிய மர்ம  நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: