முத்துப்பேட்டை, ஜன.28: முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழை எளிய விவசாய கூலித்தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த சுற்றுப்பகுதி 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் வசிக்கும் 273க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி 1962ம்ஆண்டு துவக்கப்பட்டது. இதில் படித்த பலர் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். சிறப்பான கல்வி சேவையுடன் இயங்கி வந்த இந்த பள்ளியில் சமீபகாலமாக ஆசிரியர்கள் பற்றாகுறையால் வரும் ஆண்டுகளில் மாணவர்களின் கல்விதரம் கேள்வி குறியாக மாறிவருகிறது. தற்பொழுது இதில் 8முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிடமாக உள்ளது. தற்பொழுது முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியருமில்லை. அதேபோல் தொழிற்கல்வி, உடற்கல்வி, கணினி ஆசிரியர்கள் பணியிடமும் காலியாக உள்ளது. இப்படி ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தற்போதைய பள்ளி நிர்வாகம் போதிய கல்வியை இங்கு படிக்கும் மாணவர்களுக்கு வழங்க முடிவதில்லை. இதனையறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி உயர; அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் காலியாக உள்ள பணியிடத்தை இதுநாள்வரை நிரப்ப வில்லை.