போடி, டிச.5: போடியில் கார்த்திகை மகா சோமவாரத்தை முன்னிட்டு வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். மூன்றாவது திங்கள்கிழமை மகா சோம வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி போடி வினாபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடைபெற்றது.