நார்கோவில், நவ.14: நாகர்கோவில் பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் சஜிகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்புகளில் இருந்து இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரையிலும் மேலும் ஞாயிற்று கிழமைகளில் 24 மணி நேரமும் இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் எந்த ஒரு நெட்வொர்க்கிற்கும் அளவில்லா அழைப்புகள் பேசும் வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஏற்கனவே லேன்ட் லைன் இணைப்புகளைப் பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள கன்னியாகுமரி, பழத்தோட்டம் கன்னியாகுமரி மற்றும் சுவாமிதோப்பு தொலைபேசி நிலைய பகுதிகளை சார்ந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் மறு இணைப்பு மேளா கன்னியாகுமரி வாடிக்கையாளர் சேவை மையத்தில் நவம்பர் 15ம் (நாளை) தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது.