போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் மீது வழக்கு

நாகர்கோவில், நவ. 14:  நாகர்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தவர் வாசு (57). இவர் கடந்த செப்டம்பர் மாதம் நெல்லைக்கு மாற்றப்பட்டார்.  இந்நிலையில் சம்பவத்தன்று வாசு மீனாட்சிபுரம் பணிமனைக்கு வந்து தீபாவளி முன்பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் கிளை மேலாளர் ஜெயகுமார், கண்டக்டர் பிரைட் ஜேக்கப் ஆகியோர் தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கியதாக வாசு கோட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  இதுபோல் கண்டக்டர் பிரைட் ஜேக்கப் கோட்டார் போலீசில் வாசு மீது ஒரு புகார் செய்துள்ளார். இந்த புகாரின் பேரிலும் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: