கம்பம் சிபியூ மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி

கம்பம், நவ.13: தேனியில் நடைபெற்ற மாணவ, மாணவியர்களுக்கான வலைப்பந்து போட்டியில் கம்பம் சிபியூ மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். தேனி சக்கம்பட்டி இந்துநாடார் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவில் மாணவ, மாணவியர்களுக்கான வலைப்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவில் கம்பம் சிபியூ மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவபாலன், 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஹரிகிருஷ்ணன் மற்றும் மாணவிகளுக்கான 17 வயதிற்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் இப்பள்ளி மாணவிகள் ஷாலினி, பிரேமலதா ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் திருமலை சந்திரசேகரன், தலைமை ஆசிரியர் அபுதாஹிர், உடற்கல்வி இயக்குனர் ஆசிக், உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்களும், அலுவலக ஊழியர்களும், மாணவர்களும் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர் பரிசுகள் வழங்கினார்.

Related Stories: