மார்த்தாண்டம்: குழித்துறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் குழித்துறை ஹோம் மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் சிறப்பு கூடுகை நடந்தது. நிகழ்ச்சிக்கு குழித்துறை வட்ட சட்டப்பணி குழு தலைவரும், குழித்துறை சப்-ஜட்ஜூமான முத்து மகாராஜன் தலைமை வகித்தார். குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெய்சங்கர், முருகேசன், 2வது கூடுதல் உரிமையியல் நீதிபதி செல்வம், மாவட்ட முதன்மை கூடுதல் நீதிபதி ஜெய்காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் தேவதாசன் வரவேற்றார். சிறப்பு பள்ளி மாணவ, மாணவியரின் நடனம் உட்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.