நாகர்கோவில், அக்.16: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி-நாகர்கோவில், நாகர்கோவில்-தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சி-நாகர்கோவில் சிறப்பு ரயில் எண் 06027 திருச்சி ஜங்ஷனில் இருந்து 26ம் தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு 27ம் தேதி ஞாயிற்று கிழமை அதிகாலை 1.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். ஏசி 2 அடுக்கு 1, ஏசி 3 அடுக்கு 3, தூங்கும் வசதி பெட்டிகள் 13, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2, லக்கேஜ் கம் பிரேக்வேன் 2 பெட்டிகள் இடம்பெறும். திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய இடங்களில் இந்த ரயிலுக்கு நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.