கலைபண்பாட்டுத்துறை விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூலை 24: திருவாரூர் கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும் மற்றும் பாதுகாக்கும் நோக்கில் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 5 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப்புலமைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அதன்படி 2018-19ம் ஆண்டிற்கு இந்த கலை விருதுகள் பெறுவதற்கு மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஓன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைஞகளில் சிறந்து விளங்கும் 5 கலைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது.எனவே, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதற்கு 18 வயதும் அதற்குட்பட்டக் கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்டக் கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்டக் கலைஞர்களுக்கு கலை சுடர்மணி விருதும், 51 வயது முதல் 60 வயதிற்குட்பட்டக் கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 61 வயதிற்கு மேற்பட்டக் கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களது விண்ணப்பத்துடன் வயதுச்சான்று மற்றும் கலைத் தொடர்பான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்டக்கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் விண்ணப்பம் செய்யக்கூடாது. இதற்கான விண்ணப்பித்தினை உதவி இயக்குநர், மண்டலக்கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகம், நீதிமன்றச்சாலை, தஞ்சாவூர் 1 என்ற முகவரிக்கு நாளைக்குள் (25ம் தேதி) அனுப்பி வைக்கலாம் இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: