தேனி, மே 22: ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி தேனியில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. தேனி நகரில் நேற்று நேரு சிலையருகே ராஜீவ்காந்தியின் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் கூடலூர் முருகேசன், மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் அப்பு பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.