தூத்துக்குடியில் பொது வினியோக திட்டம் நீடாமங்கலத்தில் இருந்து 1,250 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு

நீடாமங்கலம், மே 22: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், மன்னார்குடி பகுதியிலிருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டு  நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ரயில் வேகன்களில் பொது வினியோக திட்டத்திற்கு அரிசியும், அரவைக்காக நெல் மூட்டைகளும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பாமணி மத்திய சேமிப்பு கிடங்கு, ஆதனூர் வட்ட கிடங்கில் இருந்து 100 லாரிகளில் 1250 டன் சன்ன ரக அரிசி மூட்டைகள்  நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்(ரயில் பெட்டிகளில்) தூத்துக்குடி மண்டலத்திற்கு  பொது வினியோக திட்டத்திற்காக  தொழிலாளர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Related Stories: