திருமங்கலம், மார்ச் 15: கப்பலூர் மேம்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாமல் கும்மிருட்டு நிலவுவதால் தேர்தல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் திணறி வருகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர்களுக்கு ரொக்கம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க வாகனசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருமங்கலம் தொகுதியில் உள்ள 310 வாக்குச்சாவடி மையங்களையும் இணைத்து 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று முன்தினம் முதல் வாகனசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். நான்குவழிச்சாலை, கப்பலூர் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.