திருவாரூர்,மார்ச்15: தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அதிகாரிகள் கெடுபிடியால் பொருட்களை கொள்முதல் செய்ய முடிய வில்லை என வியாபாரிகள் குற்றச்சாட்டுகின்றனர்.சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதி களை பல ஆண்டுகளுக்கு முன்பு வரையறுத்தது. அதன்படி தேர்தல் தேதி அறிவி க்கப்பட்ட பின் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு செல்லப்பட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். அதன்படி, தற்போது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.அதன்படி விதிகளை மீறி பணம் கொண்டு செல்லப்படுவதை தடுக்க நாடுமுழுவதும் சோதனை சாவடிகள் அமை க்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை அதிகாரிகளும், ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.50ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென் றால் பறிமுதல் ஆகிவிடும் என்பதால் வியாபாரிகள் பொருட்களை கொள் முதல் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.