போலியோவை ஒழிப்போம் பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை

திருப்பரங்குன்றம், மார்ச் 14: திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டியை சேர்ந்த முரளி மகன் அர்ஜூன் (15). அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்று மாலை 4 மணிக்கு வீட்டிற்கு வந்தார். மாடி அறையில் இருந்த அவர் நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்து பெற்றோர் வந்து பார்த்தபோது அர்ஜூன் தூக்குப்போட்ட நிலையில் தொங்கினார். உடனே அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அர்ஜூன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இன்று 10ம் வகுப்பு தேர்வு துவங்கவுள்ளது. இதனால் தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து திருநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: