ஆண்டிபட்டி, மார்ச் 12: ஆண்டிபட்டி அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். வருசநாட்டில் அம்பேத்கார் 3வது தெருவை சேர்ந்த பாண்டி மகன் ராமராஜ்(23). டிரைவர். இவருக்கும் ஆண்டிபட்டி அருகே பிள்ளைமுகம்பட்டியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க சில மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் தரப்பில் திருமண நிச்சயார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.