இளம்பெண் பலாத்காரம் டிரைவர் கைது

ஆண்டிபட்டி, மார்ச் 12: ஆண்டிபட்டி அருகே திருமணம் செய்வதாக ஏமாற்றி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். வருசநாட்டில் அம்பேத்கார் 3வது தெருவை சேர்ந்த பாண்டி மகன் ராமராஜ்(23). டிரைவர். இவருக்கும் ஆண்டிபட்டி அருகே பிள்ளைமுகம்பட்டியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்க சில மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் தரப்பில் திருமண நிச்சயார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறிய ராமராஜ், அவரை பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள ராமராஜ் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுகுறித்து ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் உஷா, ராமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: