கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் திருச்செங்கோடு கிருஷ்ணா, கிருஷ்ணா மகளிர் கல்வியியல் கல்லூரி சாதனை

திருச்செங்கோடு, பிப்.14: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான, மாவட்ட மற்றும் மண்டல அளவிலான கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில், திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி குழுமத்தின், ஒரு அங்கமான கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணா  மகளிர் கல்வியியல் கல்லூரிமாணவிகள் பங்கேற்றனர். இதில், மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில், கௌசல்யா 2ம் இடத்தையும், மண்டல அளவிலான 100 மீ, 200 மீ ஓட்டத்தில் மாலதி முதலிடத்தையும், நீளம் தாண்டுதலில், மாவட்ட அளவில் சரண்யா (கணிதம்) 2ம் இடத்தையும் பெற்றனர். மேலும் மண்டல அளவிலான தொடர் ஓட்டப்பந்தயத்தில் மாலதி, சரண்யா, செல்வப்பிரியா மற்றும் சரண்யா ஆகியோர் 2ம் இடத்தையும் பெற்றனர்.

 மண்டல அளவிலான ஈட்டி எறிதலில் ஆனந்தி முதலிடம், மாவட்ட அளவிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நிவேதா இரண்டாமிடம், குண்டெறிதலில் சுபகீர்த்தனாதேவி மூன்றாமிடம் பெற்றனர். மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில், தனிநபர் சிறந்த வீராங்கனைக்கான கோப்பையை மாலதியும், ஒட்டுமொத்த சிறந்த வீராங்கனைகளுக்கான கோப்பையை கிருஷ்ணா மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவிகளும் பெற்று சாதனை படைத்தனர். விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கருணாநிதி வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். கல்லூரி முதல்வர்கள் சித்ரா மற்றும் ஆரோக்கியசாமி ஆகியோருடன், அனைத்து உதவி பேராசிரியாகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: