பாரதிதாசன் கல்லூரி ஆண்டு விழா

ஈரோடு, பிப். 14:  ஈரோடு பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியின் 24வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.

  இவ்விழாவிற்கு கல்லூரி தாளாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஆங்கிலமொழி பயிற்றுனர் ரோஸ்லின் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பாரதிதாசன் கல்லூரி ஆண்டறிக்கையை முதல்வர் ராமமூர்த்தியும், மேலாண்மை கல்லூரி ஆண்டறிக்கையை இயக்குனர் தீர்க்கபதியும் வாசித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் ஆங்கில பேராசிரியர் ஜெயந்த பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

  முன்னதாக சிறப்புவிருந்தினரை நுண்ணுயிரியல் துறை தலைவர் மஞ்சு அறிமுகப்படுத்தி பேசினார். நிகழ்ச்சி இறுதியில் கணிணி அறிவியல் துறை தலைவர் சுரேஷ்பாபு நன்றி கூறினார்.

விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி பொருளாளர் முருகன், கல்லூரி துணை தலைவர்கள் என்.கே.கே.பி.சத்யன், என்.கே.கே.பி.ராஜா, இணை செயலாளர்கள் வசந்திசத்யன், பரிமளாராஜா, துணை முதல்வர் சண்முகன், நிர்வாக அலுவலர் அருள்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: