இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல்

அவிநாசி, பிப். 13: அவிநாசி அருகே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 அவிநாசி அருகே முத்துசெட்டிபாளையம் ஆதிதிராவிடர் காலனி லைன் வீதியை சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கிடையே கடந்த ஜன.1ம் தேதி புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்தனர்.   

 இந்நிலையில், அந்த சிறுவர்களுக்கிடையே நேற்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்கு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அவிநாசி அரசு மருத்துவமனை வளாகத்திலும் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தகவலின் பேரில் அவிநாசி போலீஸ் எஸ்.ஐ.செந்தில் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினரையும் அவிநாசி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து பெற்றோருக்கும் போலீசார்  அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Related Stories: