மன்னார்குடி, பிப். 13; கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழ ங்க கோரி மன்னார்குடி அருகே கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடகாரவயல் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசு அறிவித்த தார்பாய் உள்ளிட்ட 27 வகையான நிவாரண பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு கள் மற்றும் இழப்பீடு தொகைகளை பாகுபாடின்றி வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் மற்றும் பெண்கள் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில் புது ரோடு என்ற பகுதியில் நேற்று மாலை திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.