16 கிலோ கஞ்சா; 4 பேர் கைது

உசிலம்பட்டி, பிப். 13: உசிலம்பட்டி அருகே நடுப்பட்டியில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 டூவீலர்களை மறித்த சோதனையிட்டனர். இதில் 16 கிலோ 200 கஞ்சா, ரூ.1,32,500 ரொக்கம் இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் நல்லமாபட்டியை சேர்ந்த சேகர், கிரிபட்டியை சேர்ந்த காந்தமாள், சுருகன், கொக்குளத்தை சேர்ந்த ராமராஜ் என்பது தெரிந்தது. போலீசார் 4 பேரையும் கைது செய்து கஞ்சா, பணம், டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: