ஈரோடு, டிச. 11: பேஸ் புக்கில் ஜாதி குறித்த தவறான தகவல் பதிவு செய்த வழக்கில் வக்கீல் ஈரோடு கோர்ட்டில் சரணடைந்தார். ஈரோடு காந்தி நகர் பழனியப்பா வீதியை சேர்ந்தவர் வக்கீல் ரஞ்சித்குமார். கடந்த மாதம் ஈரோடு எஸ்.பி. சக்தி கணேசனிடம் புகார் மனு வழங்கினார். எனது பேஸ்புக் பக்கத்தில் வக்கீல் சாமிநாதன் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பெண்களை பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டார். இது ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.