திருவாரூர், டிச.7:கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்க கோரி வரும் 11ம் தேதி மாவட்டம் முழுவதும் ஒன்றிய தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருவாரூரில் நேற்று மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராஜன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிவேல், பாலசுப்பிரமணியன், முருகானந்தம், தமிழ்மணி, சேகர், குமார்ராஜா, கலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும். முகாம்களில் தங்கி இருப்பவர்களை மாற்று இடம் ஏற்பாட்டுடன் காலி செய்ய வேண்டும், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும், நெல் மற்றும் பணப் பயிர்கள் பாதிப்பு மற்றும் கால்நடைகள் இறப்பு போன்றவற்றிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.