முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச.7: நாமக்கல்லில்  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தை  முன்னிட்டு கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு  முஸ்லீம் முன்னேற்றக்கழக தலைவர் பாட்ஷா தலைமை வகித்தார். இதில்  கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான  காந்திசெல்வன் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து பேசினார். முஸ்லீம்  முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஷபீர், நகர திமுக பொறுப்பாளர் ஆனந்த்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: