மாணவ, மாணவிகள் தேர்வுகளை எவ்வித அச்சமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும்

திருவாரூர், நவ. 14: மாணவ, மாணவிகள் தேர்வுகளை எவ்வித அச்சமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என ேபரளம் சங்கரா பள்ளியில் நடந்த கருத்தரங்கில் நகைச்சுவை நடிகர் தாமு தெரிவித்துள்ளார்.திருவாரூர் அருகே பேரளத்தில் இயங்கி வரும் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கம் நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் டாக்டர் வெற்றி செல்வம் தலைமையிலும், இயக்குனர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் தாமு கலந்துகொண்டு பேசுகையில், மாணவ, மாணவிகள் முதலில் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் நேசிக்க வேண்டும். மேலும் உயர்ந்த லட்சியங்களை உருவாக்கிக் கொள்வதுடன் முழு கவனத்துடன் கல்வியை கற்று தேர்வினை எவ்வித அச்சமும் இல்லாமல் அது ஒரு விழா போன்று எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளை கேட்டுக்கொள்கிறேன் என்றார். முத்துப்பேட்டை, நவ.14: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீபகாலமாக      சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் பொதுமக்களுக்கு குடிநீர், சாலை தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பபட்டுள்ளது.

இந்தநிலையில் முத்துப்பேட்டை தமுமுக சார்பில் நகர தலைவர் சம்சுதீன் தலைமையில் மாவட்ட செயலாளர் நவாஸ், நகர செயலாளர் சீமான் உள்ளிட்டோர் நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவளிதனர். அதில் முத்துப்பேட்டை பேருராட்சி செயல்பாடுகள் இன்றி உள்ளது. இதனால் குடிநீர் வசதி, சுகாதாரம், சாலை வசதிகள் சரியாக செய்து கொடுப்பதில்லை. பல்வேறு முறை தமுமுக சார்பாக மனு கொடுத்தும் செயல் அலுவலரை சந்திந்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. எனவே தாங்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு அணைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டுகிறோம் என மனுவில் குறிபிட்டுள்ளனர்.

கலெக்டரிடம் புகார்

Related Stories: