முத்துப்பேட்டையில் நாய், பன்றிகளை அகற்ற கோரி எஸ்டிபிஐ நிர்வாகி நூதன போராட்டம்

முத்துப்பேட்டை, நவ.14: முத்துப்பேட்டையில்  நாய், பன்றிகளை அப்புறப்படுத்த கோரி எஸ்டிபிஐ நிர்வாகி நூதன போராட்டம் நடத்தினார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமீபகாலமாக நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதில் சுற்றித்திரியும் நாய்கள் பெண்கள், சிறுவர்கள், முதியோர்களை அச்சுறுத்தி வருகிறது.  பன்றிகளால் பல்வேறு தொற்றுநோய் பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நாய்கள் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை எஸ்டிபிஐ கட்சியினர் நாய்கள், பன்றிகளை அப்புறப்படுத்தாத பேரூராட்சியை கண்டித்து நகர்முழுவதும் போஸ்டர்அடித்து ஒட்டியுள்ளனர். நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு வந்த எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர்பாட்சா கட்சியின் சார்பில் அச்சடிக்கப்பட்ட போஸ்டரை ஒரு அட்டையில் ஒட்டி அதனை கையில் ஏந்தியபடி நின்று தனது எதிப்பை காட்டினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Related Stories: