நம்மாழ்வார் நினைவு தினம் தஞ்சையில் டிசம்பர் 30ல் விவசாயிகள் ஒன்று கூடல்

மன்னார்குடி, நவ. 14: நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 30ம் தேதி தஞ்சையில் விவசாயிகள் ஒன்ற கூடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் உயர்நிலை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அதன் லைவர் லெனின் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றதுகூட்டத்தில்,  டிசம்பர் 30ம் தேதியன்று தஞ்சையில்  இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்  நினைவு தின கருத்தரங்கம் நடத்துவது, மேலும் நம்மாழ்வாரின் இயற்கை வேளாண் முறைகளை இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளிடையேயும் கொண்டு செல்லும் வகையில் அத் தினத்தை  உழவர் உரிமை தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடுவது. காவிரிப் பாசனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அதே தினத்தில் தஞ்சையில் அனைத்து தமிழக விவசாய சங்க தலைவர்களையும் அழைத்து தமிழக விவசாயிகள் பிரச்சனைகள் குறித்தும், வாழ்வாதார பிரச்னைகள் குறித்தும் விவாதம் நடத்துவது. மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளின் பங்களிப்பு எப்படி என்பது குறித்தும் விவாதித்து முடிவு எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: