சீர்காழி, நவ.14:சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக சென்று வந்தனர். தற்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுசுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு கழுமலையாற்றில் பிரிவு வாய்க்கால் பகுதியில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகள்
நேற்று அகற்றப்பட்டன. இந்த வாய்க்கால் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டுமென அப்பகுதியில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தாசில்தார் சங்கர், மண்டல துணை தாசில்தார் பாபு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.