அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு

திருத்துறைப்பூண்டி, நவ.8: திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த பிச்சன்கோட்டகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி விடுமுறைக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. அப்போது பள்ளி முன்பக்கம் உள்ள கேட்டில் ஏறி குதித்து தலைமையாசிரியரின் அறைக் கதவு மற்றும் பீரோவின் கதவை உடைத்து அதிலிருந்த மூன்று லேப்டாப், ஒரு டேப்லெட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதனையடுத்து தலைமையாசிரியர் கோதண்டராமன் திருத்துறைப்பூண்டி போலீசில் நேற்று மாலை புகார் செய்தார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: