ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

பெரியகுளம், நவ.1: பெரியகுளம் வட்ட ஓய்வு பபற்ற அரசு அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நல்லாசிரியர் வைகுண்டம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். 2019 - 2021ம் ஆண்டிற்கான மாநில சங்க பொறுப்பாளர்களுக்கான தேர்தல் மற்றும் அதில் போட்டியிடும் முறைகள் குறித்து செயலாளர் தாமோதரன் விளக்கினார். டிச.27ம் தேதி நடைபெற உள்ள மாநில தேர்தலை சிறப்பாக நடத்திட உள்ள தேர்தல் அலுவலர் நடராஜனுக்கு ஆக்கபூர்வமான வழியில் ஒத்துழைப்பு நல்கிட உறுதி மேற்கொள்ளப்பட்டது. இந்த சங்கத்தின் 34வது ஆண்டு விழாவை டிச.17ம் தேதி சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. சங்க துணைத்தலைவர் கோபாலன் நன்றி கூறினார்.

Related Stories: