மாநில அளவிலான யோகா போட்டி நாமக்கல் மாவட்ட அணியினர் சாம்பியன்

குமாரபாளையம், அக்.16: குமாரபாளையத்தில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில், நாமக்கல் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர். குமாரபாளையத்தில், மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. போட்டியை  குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி, தொடங்கி வைத்தார். 4 பிரிவுகளாக நடந்த போட்டியில், நாமக்கல் மாவட்ட அணியினர் 86 பதக்கங்களை பெற்று முதலிடம் பெற்றனர். சென்னை அணியினர் 36 பதக்கங்களை பெற்று 2ம் இடத்தை பெற்றனர். 32 பதக்கங்களுடன் விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தை பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், லக்னோவில் நடைபெறும் தேசிய அளவிலான யோகா போட்டியில், தமிழக அணியில் பங்கேற்க 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு அன்னை சம்பூரணி அம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் முனிராஜா பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், யோகா கூட்டமைப்பு தலைவர் ஜெகதீசன், செயலாளர் அரவிந்த், ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: