குமாரபாளையம், அக்.16: குமாரபாளையத்தில் நடந்த மாநில அளவிலான யோகா போட்டியில், நாமக்கல் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர். குமாரபாளையத்தில், மாநில அளவிலான யோகா போட்டி நடந்தது. போட்டியை குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி, தொடங்கி வைத்தார். 4 பிரிவுகளாக நடந்த போட்டியில், நாமக்கல் மாவட்ட அணியினர் 86 பதக்கங்களை பெற்று முதலிடம் பெற்றனர். சென்னை அணியினர் 36 பதக்கங்களை பெற்று 2ம் இடத்தை பெற்றனர். 32 பதக்கங்களுடன் விருதுநகர் மாவட்டம் 3ம் இடத்தை பெற்றது.