மார்த்தாண்டம், அக். 16: குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில், தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையில் 11 வார்டுகளும், மேற்கு கரையில் 10 வார்டுகளும் உள்ளன. நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மார்த்தாண்டத்தை அடுத்த ஞாறான்விளையில் ேநசமணி பாலத்தையொட்டி அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கிழக்கு கரையோர வார்டுகளுக்கும், மேற்கு கரையில் உள்ள ஒருசில வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குழித்துறை பெண்டு கடவு பகுதியில் உள்ள குடிநீர் கிணறு மூலம் ஆற்றின் மேற்கு கரையில் உள்ள ஏனைய வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளை நடக்கிறது. மார்த்தாண்டத்தில் மேம்பால பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டும் போது பைப் லைனில் அவ்வப்போது உடைப்பு ஏற்படுகிறது. 21வது வார்டான ஆஸ்பத்திரி வார்டு வழியாக தான் மேம்பாலத்தின் பெரும் பகுதிகள் அமைகிறது.