மார்த்தாண்டம், அக். 16: மார்த்தாண்டம் அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் என்ற நவுஷாத்(47). பிரபல கொள்ளையன். இவர் மீது மார்த்தாண்டம், தக்கலை, வடசேரி உட்பட பல காவல் நிலையங்களில் வீடு புகுந்து திருட்டு, கடைகளை உடைத்து கொள்ளை என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ேமலும் கேரள மாநில காவல் நிலையங்களிலும் பல வழக்குகள் உள்ளன. கடந்த ஓராண்டுக்கு முன்பு இவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.