எம்எல்ஏ ஆடலரசன் வலியுறுத்தல் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி வடுவூரில் ஐயப்ப பக்தர்கள் பேரணி

மன்னார்குடி, அக்.11: சபரிமலை தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வடுவூரில் ஐயப்ப பக்தர்கள் பேரணி நடத்தினர்.சபரிமலைக்கு அனை த்து வயது பெண்களும் செல்ல அண்மையில்  உச்சநீதி மன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வடுவூரில் ஐயப்பா சேவா சமிதி  சார்பில் நேற்று மாலை பேரணி நடத்தப்பட்டது. வடுவூர் வடவாறு பாலத்தில் இருந்து தொடங்கிய பேரணி கடைவீதி வழியாக வந்து பேருந்துநிறுத்தம் அருகே நிறைவடைந்தது.

பேரணிக்கு ஜோதிநாதன் தலைமை வகித்தார். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர்  ஞானம் ரவிச்சந்திரன், நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் அறிவுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஐயப்பா சேவா சமிதி பக்தர்கள் சுப்ரமணியன், தேசிங்கு, அசோக், மகேந்திரன், சேகர், பொறியாளர் பிரபு உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: