திருத்துறைப்பூண்டி, அக்.11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு நகர பகுதியிலுள்ள அனைத்து வீடுகளிலும் டெங்கு பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகின்ற இடங்களை கண்டறிந்து அழித்தல் பணி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் மேற்கொண்டு வருகின்றனர். நகரப்பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளி மற்றும் திருமண மண்டப கட்டிடங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர். நகராட்சி சார்பில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்டம் 1939 பிரிவுகளின்படி முன்னறிவிப்பு நோட்டீஸ் நகர பகுதியில் செயல்படும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை கட்டிடங்கள் மற்றும் அலுவலக கட்டிடங்கள்,