இந்திய மாதர் சம்மேளன ஒன்றியக்குழு கூட்டம்

திருத்துறைப்பூண்டி செப்.19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய இந்தியமாதர் தேசிய சம்மேளனம் ஒன்றியக்குழு கூட்டம் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.ஒன்றியதலைவர் தமிழ்செல்விராஜா தலைமை வகித்தார். இந்தியமாதர் தேசிய சம்மேளன மாவட்ட செயலாளர் தமயந்தி, ஒன்றிய செயலாளர் குருமணி, நகர செயலாளர் ரஷ்யா, நகரதலைவர் லட்சுமி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சிஒன்றிய செயலாளர் பாஸ்கர் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் வரும் 3ம் ேததி  மாலை வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க இந்திய பெண்களின் பிரசார பயண பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.கூட்டத்திற்கு ஒன்றிய நகரம் முழுவதிலுமிருந்து ஏராளமான பெண்களை கலந்து கொள்ள செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: