நாகர்கோவில், செப்.19: அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய பெண் உதவியாளர் ஒருவர் தாசில்தார் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டு, விசாகா கமிட்டி விசாரணை நிறைவில் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய தாசில்தார் உள்ளிட்ட ஒட்டு மொத்த அலுவலர்களையும் இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே உத்தரவிட்டிருந்தார். இதில் அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக பணியாற்றிய சஜித், கல்குளம் தாசில்தாராக புதிய பணியிடத்தில் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். கல்குளம் தாசில்தார் ராஜா, அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். ஆனால் ராஜா புதிய பணியிடத்தில் சேரவில்லை. உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் பணியேற்பதில் தாமதம் ஏற்பட்டது.