திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியில் பெரியார் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை

திருவாரூர் செப் 18: பெரியாரின் 140வது  பிறந்தநாளையொட்டி திருவாரூர், திருத்துறைப்பூண்டி மன்னார்குடியில்  அவரது சிலைக்கு தி.க மற்றும் தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவாரூரில் பேருந்து நிலையம் முன்பாக உள்ள பெரியார் சிலைக்கு தி.க சார்பில் மாவட்ட தலைவர் மோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் அருண்காந்தி, மகளிர் அணி பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் தேவா, கலியபெருமாள்,  மாவட்ட பிரதிநிதி அசோகன், விவசாய தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளர் சங்கர், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.மதிமுக சார்பில் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் சீனிவாசன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் நன்னிலத்தில் உள்ள பெரியார் சிலைக்கு வி.சி கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் வடிவழகன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மன்னார்குடி: பெரியார் 140 வது பிறந்த நாளையொட்டி மன்னார்குடி மேலராஜ வீதியில்  உள்ள பெரியாரின் முழு உருவ சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகர  திக சார்பில் மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமையில் நகர துணைத்தலைவர் உத்திராபதி மாலையணிவித்தார். முன்னதாக 50 ஊர்களில் திகவினர் ஊர்வலமாக சென்று கொடியேற்றினர். இதில் நகர தலைவர் அன்பழகன், நகர செயலாளர் ராம தாஸ்,  உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.  மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலையணிவித்தனர். இதில் நகர செயலாளர் சண் சரவணன், மாவட்ட பிரதிநிதி மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள பெரியார் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன், திமுக எம்.எல்.ஏ ஆடலரசன்,நகர செயலாளர் பாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர் பிரகாஷ், திக மாவட்ட செயலாளர் பொன்முடி, நகர தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர் சித்தார்த்தன், நகர செயலாளர் நாகராஜன், மாவட்ட இளைஞரணி தலைவர் கவிதம்பி ஆகியோர்  பங்கேற்று மாலை  அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: