வேளாண்துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், செப்.18: தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு நிர்வாக அலுவலர் பணியிடம் ஏற்படுத்திட கோரி வேளாண் துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு நிர்வாக அலுவலர் பணியிடம் ஏற்படுத்திட வேண்டும், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு தேவையான அமைச்சு பணியாளர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று  வேளாண் துறை மாவட்ட இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக வேளாண் துறை  அமைச்சு பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை  தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பாலு,  இணை செயலாளாளர் சரவணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன், பொருளாளர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: