கூட்டுறவு சங்க செயலாளர் முறைகேடு கண்டித்து மூவர்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்,செப்.12: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுக்கா மூவர்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஏற்பட்டுள்ள பல லட்சம் மோசடி மற்றும் முறைகேடுகளை கண்டித்து அப்பகுதியின் விவசாயிகள் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பேச்சு வார்த்தை நடத்திய மன்னார்குடி கூட்டுறவு சார்பதிவாளர் தியாகராஜன் கூறுகையில் கூட்டுறவு சங்க செயலாளராக இருந்த மணிவேல் சுமார் ரூ.33 லட்சத்து 80 ஆயிரம்  ஊழல் செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டு அதன் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்.வங்கி சேமிப்பு மற்றும் உறுப்பினர்கள் யார் யாருக்கு எவ்வளவு பணம் முறைகேடு நடந்துள்ளார் என்ற ஆதாரத்துடன் எழுத்து பூர்வமாக கொடுத்தால் ஒரு ரூபாய் கூட பாக்கி இல்லாமல் மணிவேலிடம் வசூல் செய்து 15 நாட்களுக்குள் கொடுக்கப்படும் என்றார்.அவ்வாறு கொடுக்கா விட்டால் பாதிக்கப் பட்ட விவசாயிகள் அனைவரும் குடும்பத்துடன் வடுவூரில் சாலை மறியல் செய்வோம் என விவசாய சங்க தலைவர் தட்சிணாம்ர்த்தி தெரிவித்தார்.பிறகு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.மூவர்கோட்டையை சேர்ந்த பொது மக்கள் விவசாயிகள்,மகளிர் குழுக்கள்,அனைத்து கட்சியினர்,நற்பணி மன்ற அங்கத்தினர்  75 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: