போதையில் தகராறு 4 பேர் மீது வழக்கு

தேவதானப்பட்டி, செப். 11: தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியில் போதையில் பெண்ணிடம் தகராறு செய்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி பாத்திநகரில் தெருவில் நின்று அதே பகுதியைச் சேர்ந்த ரிசாத்ராஜ், வெங்கடேஷ், புவனேஷ், மூக்கன் ஆகியோர் குடிபோதையில் தெருவில் தகராறு செய்துள்ளனர். இதை அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் வீரமணியின் மனைவி தீபா(24) தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் வீரமணியின் ஆட்டோவை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் தீபா புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: