சென்னை: சென்னை கொளத்தூரில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கொளத்தூர் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்தில் கண்காணிப்பு கேமராவில் இன்சுலேஷன் டேப் ஒட்டி ராஜேஷ் என்ற இளைஞர் மறைத்துள்ளார். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்ற போது ரோந்து போலீசார் பார்த்து கைது செய்தனர்.