மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் உலக இதய தினத்தையொட்டி, அக்டோபர் மாதம் முழுவதும் குறைந்த செலவில் சிறப்பு இருதய பரிசோதனை நடக்க இருக்கிறது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக இதய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமை தாங்கினார். மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பத்ரி நாராயணன், டாக்டர் ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், மருத்துவமனை நிர்வாகி டாக்டர் ரமேஷ் கூறுகையில், 2016ம் ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் ஆண்டுக்கு 17 லட்சம் மக்கள் இதயம் தொடர்பான பிரச்னைகளில் இறக்கின்றனர்.