அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் நவீந்திரகுமார் (65). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், தனது காரை குடியிருப்பு வளாகத்தின் கீழ்தளத்தில் நிறுத்தி இருந்தார். மறுநாள் வந்து பார்த்தபோது, கார் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு செய்தனர். அதில், ஆசாமி ஒருவர் கள்ளச்சாவி மூலம் காரை திருடி செல்வது பதிவாகி இருந்தது. அதை வைத்து, காரை திருடிய மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில், அண்ணாநகர் 4வது பிரதான சாலையில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை மடக்கி, அதை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.